Thursday, October 24, 2019

பால்கனியில்
நிலைவை வெறித்துக்
கொண்டிருக்கையில்
தூரத்தில்
நீ வருவதைக்
கண்டேன்

இந்த இல்லத்தை
இந்த என்னை
வைத்துக்கொண்டு
உன்னை எப்படி
எதிர்கொள்வது?

இந்தக்
கரும்புகையின்
வெளியாய்
எப்படியோ
ஆக்கிவிட்டிருக்கிறேன்
இல்லத்தை

சுவர் மூலைகளில்
வௌவால்கள்
அசைவின்றி
தவம் கிடக்கின்றன

இத்தனை
காலம் விட்டு
நீ திடீரெனெ
வருகையில்
இந்த இல்லத்தை
இந்த என்னை
நீ எப்படி
எதிர்கொள்வாய்?

ஆடைகளைக்
கலைந்துவிட்டு
நிர்வாணமாய்
திறந்த என்
பாழும்
இல்லத்தின்
வாசலில்
மண்டியிட்டு
உன்னை
எதிர்நோக்குகிறேன்
நிலவை
மேகம் மறைக்க
மேலும்
பிரகாசமாய்
நீ
வந்துகொண்டிருக்கிறாய்
கண்ணீர் துளி
ஒன்றினை நோக்கி...

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...