Sunday, October 20, 2019

இவ்வளவு
அழகாய்
நீ வந்து விட்ட போதும்

இவ்வளவு
நேர்த்தியாய்
நீ என்னை
நோக்கிக் கொண்டிருக்கும் போதும்

ஸ்தூலமற்ற
தவிப்பின்
பெருவலிகளை
பொய்யாக்கி
நீ இவ்வளவு
ஸ்தூலமாய்
என் முன்
என் கண்முன்
நிற்கும் போதும்

என் அறைக்குள்
நான் வளர்த்துவரும்
அந்த ஆயிரமாண்டுப்
பறவை
அமர்வது போல்
அமர்ந்துவிட்டு
மீண்டும்
பாட த் து வங்கிவிட்டது
பெருவலிகளின்
பாடலொன்றை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...