Tuesday, October 22, 2019

தூரத்து கருவானில்
புள்ளொன்று
பறந்து
தீட்டிச் செல்கிறது
முதல் கீற்றை

உலகம் கொள்ளும்
ஆகச் சிறந்த மௌனம்
தொடர
லேசான
கொலுசின் சிணுங்கல்
உன் குதிங்காலின்
தூய்மையைச்
சொல்கிறது

உனக்காகத்தான்
காத்திருக்கிறது
வான்நிலம்
வெறுங்கருமையை
உலையச்செய்யும்
வண்ணங்களாக்கிவிட்டு
செல்
உன்னைத் தொடர்வதில்
துவங்கட்டும்
ஒரு நாள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...