செவ்வாய், 22 அக்டோபர், 2019

தூரத்து கருவானில்
புள்ளொன்று
பறந்து
தீட்டிச் செல்கிறது
முதல் கீற்றை

உலகம் கொள்ளும்
ஆகச் சிறந்த மௌனம்
தொடர
லேசான
கொலுசின் சிணுங்கல்
உன் குதிங்காலின்
தூய்மையைச்
சொல்கிறது

உனக்காகத்தான்
காத்திருக்கிறது
வான்நிலம்
வெறுங்கருமையை
உலையச்செய்யும்
வண்ணங்களாக்கிவிட்டு
செல்
உன்னைத் தொடர்வதில்
துவங்கட்டும்
ஒரு நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...