புதன், 1 மே, 2019

'அன்னைப்பழம்'

ஒரு தர்பூஸனிப்
பழம் சாப்பிடுங்கள்

நதி
ஊற்றெடுக்கும்

அருவியாய்
ஒழுகிச்செல்லும்

உங்கள் தாடை தழைந்து
சிறு குளம்
உருவாகும்

உங்கள்
பல்லின் உறுதிக்கும்
கொஞ்சமும்
வலுவற்றது
இப்பழம்

அடித்தால் உடையாது
கத்தி வேண்டும்
கண்ணீருடன்
பிளந்துகொள்ளும்

உடைந்து உருகிப்பெருகி
இனித்து வெள்ளமாகும்
நீர் ப் பெரு க் கு

அனுமனைப்போல்
நெஞ்சைப்பிளந்து
நீர்மை காட்டி
நெக்குருகி
இப்படி தசையை
திண்ணக் கொடுத்து
தாகம் தீர்க்க
அன்னையால்
மட்டும்தான் முடியும்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...