Sunday, February 2, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம் (மொழிபெயர்ப்பு)

"குழந்தைகள் பற்றி"

குழந்தையொன்றை தன் மார்போடு ஏந்தியிருந்த பெண் கூறினாள், எங்களிடம் குழந்தைகளைப் பற்றிப் பேசுங்கள்.
அவர் சொன்னார்:
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.
வாழ்வு தன் மீதே கொண்ட பிரியத்தின் குழந்தைகள் அவர்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறர்கள். உங்களிலிருந்தல்ல.
அவர்கள் உங்களோடு இருக்கலாம், ஆனால் உங்கள் உடமையல்ல.

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள் உங்கள் எண்ணங்களை அல்ல,
ஏனெனில் அவர்களுக்கு சுயமான எண்ணங்கள் உண்டு,
அவர்கள் உடலை குடிவைத்திருக்கலாம் ஆனால் அவர்கள் ஆன்மாவை அல்ல,
ஏனெனில் அவர்கள் ஆன்மா உங்களால் கனவிலும் அணுக முடியாத நாளையில் குடிகொண்டுள்ளது
குழந்தைகள் போலாக பிரயத்தனப்படுங்கள் ஆனால் அவர்களை உங்களைப் போலாக்கிவிடாதீர்கள்
ஏனெனில் வாழ்வின் ஒழுக்கு பின்னோக்கியதல்ல, நேற்றில் நிலைத்திருப்பதல்ல,
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாக முன்செலுத்தப்படுகின்றன, நீங்க்கள் வில்லாகிறீர்கள்
வில்லாளன் இலக்காக முடிவின்மையை நோக்குகிறான், உங்களை தன் வலிகொண்டமட்டும் வளைக்கிறான், தன் அம்புகள் வேகமாகவும் தொலைவும் செல்லட்டுமென்று
வில்லாளியின் கைகளில் வளைக்கப்படுவது இன்பமென்றாகுக
ஏனெனில் பறக்கும் அன்புகளை காதலிப்பது போலவே, நிலையான வில்லினையும் காதலிக்கிறான் அவன்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...