காற்று அலைக்கிறது
படகினைபிணைத்திருக்கும்
முடிச்சுகள்
நெகிழ்வாலானவை
நெகிழ்வுகள்
கைவிடுகின்றன
பற்றிய அனைத்தையும்
நீர்த் தலும்பல்
மட்டும் ஒலிக்கிறது
எல்லா திசைகளிலும்
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
No comments:
Post a Comment