காற்று அலைக்கிறது
படகினைபிணைத்திருக்கும்
முடிச்சுகள்
நெகிழ்வாலானவை
நெகிழ்வுகள்
கைவிடுகின்றன
பற்றிய அனைத்தையும்
நீர்த் தலும்பல்
மட்டும் ஒலிக்கிறது
எல்லா திசைகளிலும்
சொல் பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக