இந்த சிறு காலம்தான்
இந்த சிறு காலம்தான்மலர்கள்
நம்மிடம்
விடைபெற்றுச் சென்ற
இப்பருவம்
வரண்ட நிலத்தின்
வெப்ப மூச்சு
அனலாக அலையாடும்
இந்த சிறு காலம் மட்டும்தான்
ஒரு புலரியில்
விண்ணுளவும் புள்
காணும்
அங்கிங்கு நீர் பூப்பதை
மலர்கள் அலையாடுவதை
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக