வெள்ளி, 30 ஏப்ரல், 2021

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முட்கள் இதென்றும் மலர்கள்‌ இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?