Friday, April 30, 2021

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...