மரங்களை வேரிழுத்து
விழுங்கும்நெடுஞ்சாலையில்
அதிவேக
வாகனங்களை
மட்டுப்படுத்தி
குறுக்காக
கடக்கிறது
எருதுகளின் நிரை
கருஞ்சாலையில்
பசுமையாய் சாணம்
ஒரு நிமிட
அமைதிக்குப்பின்
முழங்கிற்று
சாலை பெருந்தூரமாய்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக