என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்
உன் செல்லப் பெயரை
எனக்கு இட்டாய்
உன்னை அழைக்கையில்
என்னையும்
என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்
பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக