என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்
உன் செல்லப் பெயரை
எனக்கு இட்டாய்
உன்னை அழைக்கையில்
என்னையும்
என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்
பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக