என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்
உன் செல்லப் பெயரை
எனக்கு இட்டாய்
உன்னை அழைக்கையில்
என்னையும்
என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்
பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
No comments:
Post a Comment