என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்
உன் செல்லப் பெயரை
எனக்கு இட்டாய்
உன்னை அழைக்கையில்
என்னையும்
என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்
பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக