செவ்வாய், 22 செப்டம்பர், 2020

 உலகம் யாவும்
ஆழ்ந்தடங்கி உறங்குகையில்
வானம் விழித்துக்கொண்டது
மின்னல் துடித்து விழ
கண்டது விண்
மண் பேருயிரை
சிறு துகலெனக் கிடந்த
கண் வழி அறிந்தது
மண்
விண் எனும் விரிவை
மாமழை வந்தும்
அலையும் காற்றுக்கும்
உயிர் எரிகிறது
பெருமரமொன்றின்
வேரணைப்பில்
சிறு சுடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?