மலரினும் மெல்லிய
காமமுள்ளது
உவப்பக் கூடி
உள்ளப்பிரியும்
நட்புள்ளது
குழலினும்
யாழினும்
இனிய குரலொன்றுள்ளது
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எனும் அரற்றலுள்ளது
சாம்பல் பூசி
மயானம் வாழ் இறைவா?
இப்படியான பிறப்பைத்தான்
அறுக்கிறீரா?
துன்பமது அடுக்கிவரினும் இன்பமது சற்றே தாமதித்து வரினும் இந்த இருப்பின் மீதுதான் எத்தனை பிரியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக