புதன், 14 மே, 2025

நீ என்
வானமாக
இருக்கிறாய்
என் வேர்கள்
இவ்விடம்தான்
மலர் சுமக்கும்
என் பிலங்களில்
குளிர் நீர்ப்பெருகப்போவது
இங்குதான்
என் விருட்சங்களில்
புள்ளரவம் ஒலிப்பது
உன்னால்தான்
மேலும்
அணுக்களுக்கிடையே
நிரந்தரமான பிரிவு
என்பது உன்
வானத்தின் கீழ்
இல்லை‌ அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?