வெள்ளி, 14 மே, 2021

 நாம் ஏன்
வெவ்வேறாக
உணர்கிறோம்
எப்போது தனிப்பட்டுப்போனோம்
எப்படி தனியர்களானோம்
நம் உணர்வுகள்
மற்றவர்களால்
உணரப்பாடாமல் போவது
எங்ஙனம்
எப்படி எதிரெதிர் உணர்வுகளை
சூடி களம்‌நிற்கிறோம்
நாம் காணத்தவறுவது
நாம் அறியாமல்‌ இருப்பது
நாம் உணராமல் இருப்பது
எதை

என் கண்ணீர்
அர்த்தமற்றது என்றுவிடாதே
ஒரு துளிக் கண்ணீரை
ஆயிரம் பொருக்குகளாக்கி
ஒரு பொருக்கில்‌ உறையும்
பசப்பினை மட்டுமாவது
உணர்

நம் உணர்வுகள்
ஒன்றாகட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முட்கள் இதென்றும் மலர்கள்‌ இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?