Wednesday, March 9, 2022

அமைதியில் விழுந்து
வழியும் மழை

எச்சொல்லுமின்றி
மெல்லப் படியும்
இரவுப் பனி

மோனத்துடன்
விழுந்து உடையும்
வெயில்

சுவடின்றி
உயிர்ன்றி
உடலின்றி
அலையும் காற்று

யுகங்களாய்ப் பிறந்த
கோடிச் சொற்களில்
ஒன்றையும்
கேளா உரைக்கா
மலைகள்

இவற்றினூடே
ஒழுகிச் செல்கிறது
பெருங்காலம்
பல
பல சிறுவாழ்க்கை
பல சிறுவாழ்க்கைகள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...