வெள்ளி, 31 டிசம்பர், 2021

நடனம்

புற்களைப் போல்
இலைகளைப்போல்
இலை சூடிய விருட்சம் போல்
பட்டாம்பூச்சி போல்
மண்புழு போல்
பறவைகள் போல்
பெருங்கடல்‌வாழ்
மீன்களைப்போல்
வால் குழைக்கும்
நாய்களைப்போல்
பெருங்காது உலற்றும்
யானைகளைப்போல்
தினம் தினம்‌
கணம்‌கணம்
மலரும் மலர்களைப்போல்
இச்சிறுடலுக்கு
எது சாத்தியமோ
எந்த அசைவுகள்
நடனமாகிறதோ
அவற்றைக் கொண்டு
நடனமிடுவதன்றி
செய்வதற்கு
ஏதொன்றுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...