Friday, December 31, 2021

அணிதலும்‌ கலைதலும்

 உன் கொலொசொலிதான்
பூமியை ஆக்கியது
ஜீவராசிகளின் மூச்சாகியது
மானுடரின் கண்ணீரும்
நகையும்
முரண்களும்
பாவங்களும்
சலனங்களும்
எல்லாம்
எல்லாம்
உன் கொலுசொலியாய் கேட்கிறது
இப்பூமியின்
கடைசி மூச்சு
உன் கொலுசைக்கலைந்து
உன் மேஜையில்
சரித்து வைப்பதான
கடைசி ஒலி

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...