உன் கொலொசொலிதான்
பூமியை ஆக்கியதுஜீவராசிகளின் மூச்சாகியது
மானுடரின் கண்ணீரும்
நகையும்
முரண்களும்
பாவங்களும்
சலனங்களும்
எல்லாம்
எல்லாம்
உன் கொலுசொலியாய் கேட்கிறது
இப்பூமியின்
கடைசி மூச்சு
உன் கொலுசைக்கலைந்து
உன் மேஜையில்
சரித்து வைப்பதான
கடைசி ஒலி
சொல் பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக