வெள்ளி, 31 டிசம்பர், 2021

கைவிடுதல்

இந்தக் காலையில்
இதன் ஒளிக்காக
இதன் மௌனத்துக்காக
இதன் பறவைகளுக்காக
இந்த உலகம் சற்றெ சூடியிருக்கும்
பொருமைக்காக
வாசல் தெளித்தலின்
நீர்‌ஒலிக்காக
வளைத்து நெளித்து
பார்க்கும் ஒவ்வொரு தரமும்
வியப்பில் ஆழ்த்தும்
கோலமிடும் பல்லாயிரம்
கரங்களுக்காக
தூக்கம் களையாத
சிசுக்களின் கனவுச் சிறுநகைக்காக
பனியில் உடல் உதறும்
நாய் க் குட்டி க்காக
ஆயிரம் ஆயிரமாயிரமாண்டுகளாக
இப்பூமியை அறியும்
ஜீவராசிகளுக்காக

கைவிடுகிறேன்
இன்பம் என்றாகாத
ஒவ்வொன்றையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...