Friday, December 31, 2021

கைவிடுதல்

இந்தக் காலையில்
இதன் ஒளிக்காக
இதன் மௌனத்துக்காக
இதன் பறவைகளுக்காக
இந்த உலகம் சற்றெ சூடியிருக்கும்
பொருமைக்காக
வாசல் தெளித்தலின்
நீர்‌ஒலிக்காக
வளைத்து நெளித்து
பார்க்கும் ஒவ்வொரு தரமும்
வியப்பில் ஆழ்த்தும்
கோலமிடும் பல்லாயிரம்
கரங்களுக்காக
தூக்கம் களையாத
சிசுக்களின் கனவுச் சிறுநகைக்காக
பனியில் உடல் உதறும்
நாய் க் குட்டி க்காக
ஆயிரம் ஆயிரமாயிரமாண்டுகளாக
இப்பூமியை அறியும்
ஜீவராசிகளுக்காக

கைவிடுகிறேன்
இன்பம் என்றாகாத
ஒவ்வொன்றையும்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...