Sunday, February 7, 2021

மலர்மொழி

மலர்கள் சூரியனோடு
பேசிக்கொண்டிருக்கின்றன

உதயத்தின் மலர்கள்
ஒளியை சுவாசமெனக் கொண்டு
உச்சாடனத்தை
துவங்கிற்று

அந்தியின் மலர்கள்
அலையோய்ந்து
கிளையமைந்து
மோனத்தில்
தன்னைத்தான்
மீட்டின

அடிமுடியற்ற
வான்
கண்டது
இரு மலர்களின்
உரையாடலை

இருளும் ஒளியுமாய்
நீளும்
சிறு இல்லின்
மலராடலை

விண்ணோக்கி
எழும்
பூமியின்
சொல்பெருவெளியை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...