செவ்வாய், 12 ஜனவரி, 2021

 நீரின்றி
வற்றிய நிலத்தின்
வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்

ஆயிரம் காற்றுகளில்

பல்லாயிரம் பெருங்காலங்ளில்

மணலுரசும் நெருடலென
நொடிகளில்

இயற்றி நிற்கின்றது

தவத்தை

இருத்தலை

இருப்பெனும் தவத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?