நீரின்றி
வற்றிய நிலத்தின்வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்
ஆயிரம் காற்றுகளில்
பல்லாயிரம் பெருங்காலங்ளில்
மணலுரசும் நெருடலென
நொடிகளில்
இயற்றி நிற்கின்றது
தவத்தை
இருத்தலை
இருப்பெனும் தவத்தை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக