நீரின்றி
வற்றிய நிலத்தின்வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்
ஆயிரம் காற்றுகளில்
பல்லாயிரம் பெருங்காலங்ளில்
மணலுரசும் நெருடலென
நொடிகளில்
இயற்றி நிற்கின்றது
தவத்தை
இருத்தலை
இருப்பெனும் தவத்தை
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக