நீரின்றி
வற்றிய நிலத்தின்வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்
ஆயிரம் காற்றுகளில்
பல்லாயிரம் பெருங்காலங்ளில்
மணலுரசும் நெருடலென
நொடிகளில்
இயற்றி நிற்கின்றது
தவத்தை
இருத்தலை
இருப்பெனும் தவத்தை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக