நீரின்றி
வற்றிய நிலத்தின்வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்
ஆயிரம் காற்றுகளில்
பல்லாயிரம் பெருங்காலங்ளில்
மணலுரசும் நெருடலென
நொடிகளில்
இயற்றி நிற்கின்றது
தவத்தை
இருத்தலை
இருப்பெனும் தவத்தை
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
No comments:
Post a Comment