Monday, December 14, 2020

 ஒரு கணம்
ஏதுமற்று
இப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்

ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்

ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்

ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...