திங்கள், 14 டிசம்பர், 2020

 ஒரு கணம்
ஏதுமற்று
இப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்

ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்

ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்

ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...