திங்கள், 14 டிசம்பர், 2020

 ஆவினம் செவி சாய்த்தன


புற்பெருவெளி அலையாடிற்று

மலைகள் மௌனம் சூடின

ஏரி அலைபரப்பிற்று

நதி அமைதிபெருக்கானது

குழந்தை அமுதென பருகிற்று

பெண்டிர் லயித்தனர்

நாகங்கள் சிலைத்திருந்தன

ஆன்றோர் மெய் உணர்ந்தனர்

அவ்விசையில்

கால்தடமறியா தூரத்து
நிலமொன்றில்
ஆதியந்தமிலா மலரொன்று
மீட்டிய இசையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?