Thursday, November 19, 2020

 மொட்டை மாடி

கைப்பிடிச்சுவற்றில்
வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்

ஒன்று சிறகுலைத்தது

மற்றொன்று அலகு திருப்பிற்று

அவை சொல்லின

"பூமி பெரியது"

"வானம் பார் ஆகப்‌பெரியது"

"காற்றைப்‌ பார் எங்குமுள்ளது"

"நம் உடல் ஆகச் சிறியது"

"பறத்தலொன்றே செய்வதற்குரியது"

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...