வியாழன், 19 நவம்பர், 2020

 மொட்டை மாடி

கைப்பிடிச்சுவற்றில்
வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்

ஒன்று சிறகுலைத்தது

மற்றொன்று அலகு திருப்பிற்று

அவை சொல்லின

"பூமி பெரியது"

"வானம் பார் ஆகப்‌பெரியது"

"காற்றைப்‌ பார் எங்குமுள்ளது"

"நம் உடல் ஆகச் சிறியது"

"பறத்தலொன்றே செய்வதற்குரியது"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முட்கள் இதென்றும் மலர்கள்‌ இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?