மொட்டை மாடி
கைப்பிடிச்சுவற்றில்வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்
ஒன்று சிறகுலைத்தது
மற்றொன்று அலகு திருப்பிற்று
அவை சொல்லின
"பூமி பெரியது"
"வானம் பார் ஆகப்பெரியது"
"காற்றைப் பார் எங்குமுள்ளது"
"நம் உடல் ஆகச் சிறியது"
"பறத்தலொன்றே செய்வதற்குரியது"
முட்கள் இதென்றும் மலர்கள் இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக