மொட்டை மாடி
கைப்பிடிச்சுவற்றில்வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்
ஒன்று சிறகுலைத்தது
மற்றொன்று அலகு திருப்பிற்று
அவை சொல்லின
"பூமி பெரியது"
"வானம் பார் ஆகப்பெரியது"
"காற்றைப் பார் எங்குமுள்ளது"
"நம் உடல் ஆகச் சிறியது"
"பறத்தலொன்றே செய்வதற்குரியது"
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக