ஒரு கணம்
ஏதுமற்றுஇப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்
ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்
ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்
ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...