சுடரின் நா நுனி
வெளியைசுவைக்கிறது
வெளியின் நுனி விரல்
சுடரை அலைக்கிறது
மனிதர்கள் பிராத்திக்கிறார்கள்
தம் தம் சுடரிடம்
சூரியனை ஏற்றிச்சென்ற
கரம் எதைப் பிராத்தனை செய்தது
எது அருள
பெருகிற்று இப்பெருக்கு
அழிவற்றதும் எதிலும் உரையும் நுட்பமும் காலாதீதமானதுமான ஒன்றுதான் நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள் ஆனாலும் எனக்கு மரணத்தை பிடிக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக