திடுதிப்பென்றோ
தடதடவென்றோபடபடப்பாகவோ
முந்தும் வெறியுடனோ
வெல்லும் ஆசையுடனோ
கொள்ளும் இச்சையுடனோ
எதையும் செய்ய வேண்டாமே
ஒரு மலரைப் பார்த்தபடியே
அந்தியைக் கடப்பதுபோல்
இந்த சீன்னூண்டு காலத்தைக்
கடந்துவிடலாமே
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக