புதன், 3 ஆகஸ்ட், 2022

மழைப்பறவைகள்
ஆகாசச் சிறகடிக்கின்றன
பூமி மெல்ல
எழுகிறது
ஏன் எது என்ற
திசையின்றி
கேள்வியன்றி
ஒளி சென்றமைகிறது
ஆயிரமாயிரம்
அண்டம் நிறைத்து
ஒழுகும்
மழைத்துளிகளில்

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?