செவ்வாய், 11 ஜனவரி, 2022

துளிக்‌கடல்

உன் முன்

ஒரு துளி
அனலை வைக்கிறேன்

ஒரு துளி பனி

ஒரு துளி இரவு

ஒரு துளி கண்ணீர்

ஒரு‌துளி புன்னகை

ஒரு துளி தயக்கம்

ஒரு துளி காதல்

ஒரு‌ துளி மலர்

ஒரு துளி உதயம்

ஒரு துளி மழை

ஒரு துளி ஆசை

ஒரு துளி வெறுப்பு

ஒரு துளி ஆனந்தம்

ஒரு துளி சலிப்பு

ஒரு துளி பெண்மை

ஒரு துளி ஆண்மை

ஒரு துளி குழந்தைமை

ஒரு துளி நட்பு

ஒரு துளி உறவின்மை

ஒரு துளி வானம்

ஒரு துளி இல்லம்

ஒரு துளி காமம்

ஒரு துளி ஆதரவு

ஒரு துளி கைவிடுதல்

ஒரு துளி துரோகம்

ஒரு துளி பொய்

ஒரு துளி கொலை

ஒரு துளி இரத்தம்

ஒரு துளி வஞ்சம்

ஒரு துளி தத்தளிப்பு

ஒரு துளி நிலைகொள்ளல்

ஒரு துளி மரணம்

ஒரு துளி வாழ்க்கை

ஒரு துளி சரணைடைதல்

ஒரு துளி கனவு

ஒரு துளி வானவில்

ஒரு துளி அழகு

ஒரு துளி கோரம்

ஒரு துளி கீழ்மை

ஒரு துளி ஊடல்

ஒரு துளி பிரிவு

ஒரு துளி தனிமை

ஒரு துளி முதல் முத்தம்

ஒரு துளி கடைசி முத்தம்

ஒரு துளி விடைபெறல்

ஒரு துளி மறதி

ஒரு துளி நினைவின்மை

ஒரு துளி உருமாற்றம்

ஒரு துளி ஆழம்

ஒரு துளி சலனம்

ஒரு துளி கடத்தல்

கடலிலிருந்து
எழும் அலைத்துமிகள்
கடலினதே அல்லவா?

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

என் சிறுகதை

 பதாகை இதழில்‌ என்‌ முதல் சிறுகதை வெளியாகியுள்ளது. அத‌ன் இணைப்பு கீழே,

அகம்

சலனமாகாத காதல்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் வாசித்தபின் எஸ்.ராவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அது எஸ்.ராவின் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன் லிங்க் கீழே.

சலனமாகாத காதல்

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...