Friday, March 5, 2021

தூரத்து நீரில்
ஓங்கில்கள்
ஏக்கமுற ஒலிக்கிறது
கடலின் பல்லாயிரமாண்டுத்
தலும்பலை

பெருமீனொன்று
கடலுக்குள்
குமிழியடிக்கிறது

ஒரு கடலிலிருந்து
மற்றொரு கடலுக்குச் செல்லும்
படகொன்றின்
நுனியில்
சிறு கையளவுப் பறவையொன்று
விண்ணோக்கிச் சிறகெழுகிறது

கடலோரம்
கால் நனைய
நீ நடந்து
செல்கிறாய்
ஆகப்பெரும் சூரியன்
ஆகச்சிறிய உன் காதணியமைந்த
சிறு கல்லில்
ஒளிர்ந்தமைகிறது

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...