சனி, 13 ஜூலை, 2019

நிழல்

அசைவற்ற
சுவற்றில்
விழுந்தாடுகிறது
மரக்கிளையின்
நிழல்

ஒருகணம்
ஈரத்தலையை
உதறி உலர்த்தும்
பெண் போலவும்

ஒரு கணம்
நெஞ்சை
பிறழச்செய்யும்
ஓவியம்
போலவும்

உயிரள்ளிப்
பருக வரும்
மென்கையின்
கூர்நகம்
போலும்

உறசாகத்தில்
தத்தளிக்கும்
மனதைப்
போலவும்

முன்னும்
பின்னுமாய்
எல்லையின்றி
நீளும்
நடனம்
போலும்

அசைவற்ற
நிச்சலன
சுவற்றை
அழகால்
நிறப்பிச் செல்கிறது
அந்த
இரவும் அதன்
ஒளியும்

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?