Friday, April 30, 2021

நாம் முத்தமிட்ட தருணங்கள்
களித்திருந்த காலங்கள்
ஊடி‌வெறுத்து சலித்து அலைந்து
பின்
முதற்துளி மழையென
நம்மில் நாம் பொழிந்த
பிரதேசங்கள்
கண்ணின் நீர்த்திரை
வழி மட்டும் காணக்
கிட்டும் ஓர் உலகம்
யாரும் காணா
தூரத்தில்
எத்தடமும் இன்றி
நம்மால் சிருஷ்டிக்கப்பட்டு
நம்மை சிருஷ்டித்து
நாம்
நாம்
நாம்
நாம்
எனும் ஓர் வெளி
அங்குதான் நிகழ்கிறது
மானுடம்‌ கனவெனக்
கண்ட அனைத்தும்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...