Friday, April 30, 2021

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...