Friday, June 26, 2020

ஆழம்

வான் நீந்தும்
வலசைப்
புற்கூட்டம்

உயிர் உயிர்
எனத் ததும்பும்
ஆழி

பெருநீலமும் விட்டு
விரிநீலம் தொட எழுந்த
கடலின்
பேருயிரொன்று
மீண்டும்
ஆழமைந்தது

நீலம் தோற்றம்
ஆழங்கள்
எல்லையற்றவை
என
சிறகசைத்தன
மீன்கள்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...