Friday, May 14, 2021

அன்பைக்‌ குறிக்க
ஆயிரம் சொற்களிருந்தும்
இனி அவை வேண்டாம்

எண்கள்
எண்கள்
சந்தேகமற்றவை
பசப்பிலாதவை
பொருளின் எடையை
நீரின் அளவை
தூரத்தை
காலத்தை
விசையை
வேகத்தை
மின்சாரத்தை
பொருளின் மதிப்பை
நிலத்தை
மழையை
அண்டங்களுக்கிடையான
தூரத்தை
அளந்துவிடும் எண்
அன்பினை அளந்துவிடாதா

இத்தனை மில்லி‌
அன்புக்கு
அதே அளவு
அளந்து கொடு போதும்
எண்கள்
எப்படியாவது
சிக்கல்‌களை எல்லாம்
தீர்த்துவிடும்

நம் சிக்கல்கள எல்லாம்
அன்புச்சிக்கல்கள்தானே

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...