Friday, May 14, 2021

 நாம் ஏன்
வெவ்வேறாக
உணர்கிறோம்
எப்போது தனிப்பட்டுப்போனோம்
எப்படி தனியர்களானோம்
நம் உணர்வுகள்
மற்றவர்களால்
உணரப்பாடாமல் போவது
எங்ஙனம்
எப்படி எதிரெதிர் உணர்வுகளை
சூடி களம்‌நிற்கிறோம்
நாம் காணத்தவறுவது
நாம் அறியாமல்‌ இருப்பது
நாம் உணராமல் இருப்பது
எதை

என் கண்ணீர்
அர்த்தமற்றது என்றுவிடாதே
ஒரு துளிக் கண்ணீரை
ஆயிரம் பொருக்குகளாக்கி
ஒரு பொருக்கில்‌ உறையும்
பசப்பினை மட்டுமாவது
உணர்

நம் உணர்வுகள்
ஒன்றாகட்டும்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...