Sunday, October 27, 2019

ஒதுங்க
நிலமற்ற
பெரு மழை ச் சாலை யில்
உங்கள்
பிரயத்தனங்களை
உத்தரவுகளை
ஜாலங்களை
இதுவரையிலான
உங்கள்
பயணத்தை
அப்படியே விட்டுவிட்டு
இருபுறமும் கரை கட்டி யி ரு க்கும்
சிலிர்க்கும் பசும் கடலில்
மரணத்தின் ஏக்கத்துடன்
விழுந்து மடியுங்கள்
வீழும்
கோடித் துளிகளில்
ஒன்று
உங்களுக்கு
என்றன்றைக்குமான
மரணத்தை
அருளக் கூடும்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...