Monday, October 21, 2019

இவ்வளவு வேகம்
வேண்டாமே

அன்று பிறந்த
நாய்க்குட்டிகளை
நீங்கள்
இடறிவிடக்கூடும்

சிறு கண்களென
பூத்திருக்கும்
மலர்களை
பார்க்காமல்
கடந்து விட க் கூடு ம்

பாரமெல்லாம்
மறந்து
சற்று நாணும்
சாலையோரப்
பெண்ணை
பார்க்காமலே
போய்விட்டால்?

வானம்
ஆசையாய்
மழையால்
பூமியை அள்ள வர
நீங்கள்
குடையுடன்
வேகமாய் நடையைப்போட்டால்
அவை
கோபிக்காதா?

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...