Thursday, November 19, 2020

 மொட்டை மாடி

கைப்பிடிச்சுவற்றில்
வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்

ஒன்று சிறகுலைத்தது

மற்றொன்று அலகு திருப்பிற்று

அவை சொல்லின

"பூமி பெரியது"

"வானம் பார் ஆகப்‌பெரியது"

"காற்றைப்‌ பார் எங்குமுள்ளது"

"நம் உடல் ஆகச் சிறியது"

"பறத்தலொன்றே செய்வதற்குரியது"

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...